
Wednesday, July 28, 2010
டெங்கு காய்ச்சல்

Tuesday, July 27, 2010
கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய

Sunday, July 25, 2010
ஐ போன் மென்பொருள் பயன்படுத்தலில் ஆப்பிள் மீது நோக்கியா வழக்கு

Saturday, July 24, 2010
பிரிட்டனின் மிகப்பிரபலமான முதல் 10 மொழிகளில் தமிழும்

Monday, July 19, 2010
ஜபுலானி பந்து 74,000 டொலருக்கு ஏலம்

Labels:
ஜபுலானி பந்து
Sunday, July 18, 2010
நாடு முழுவதும் வெகு தீவிரமாகப் பரவிவரும் டெங்கு

Friday, July 16, 2010
இந்திய ரூபாய்க்கு புதிய சின்னம் அறிமுகம்

Labels:
இந்திய ரூபாய்
2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்

Thursday, July 15, 2010
மனித அறிவை மிஞ்சும் கணணி 2020குள் வரும்

Monday, July 12, 2010
உலக கோப்பை இறுதிபோட்டி : ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது



Sunday, July 11, 2010
உலக கால்பந்து சாம்பியன் யார்
ஜோகன்னஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், தென் ஆப்ரிக்காவில் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து & ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
உலக முழுவதும் 215 நாடுகளில் 260 கோடிக்கும் அதிகமானோர் இறுதி போட்டியின் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசிப்பார்கள். கடந்த மாதம் 11ம் தேதி, 19வது உலக கோப்பை போட்டி தென் ஆப்ரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 2006ல் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி, 2வது இடம் பிடித்த பிரான்ஸ் அணிகள் லீக் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், அர்ஜென்டினா அணிகளும் கால் இறுதியில் பரிதாபமாக தோற்றன.
அரை இறுதியில் தோற்ற ஜெர்மனி, உருகுவே அணிகள் 3வது இடத்துக்கு மோதின. இந்நிலையில், இன்று நள்ளிரவு தொடங்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில் நெதர்லாந்து & ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால், புதிய அணி சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகி உள்ளது.
Friday, July 9, 2010
உதைப்பந்தாட்டம்


மால்வேர் புரோக்கிராம்கள் : அன்றிலிருந்து இன்று வரை

Thursday, July 8, 2010
பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி

Wednesday, July 7, 2010

Tuesday, July 6, 2010
தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!
உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .
இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை 'அய்கன்" (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.
'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.
'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.
இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.
மருதமடுத் திருப்பதியின் சரித்திரச் சுருக்கம்

Monday, July 5, 2010
தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு

112 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் மூழ்கிய கப்பல்

Sunday, July 4, 2010
டோனிக்கும் சாக்ஷி ராவத்துக்கும் நிச்சயதார்த்தம்

IE - 8 ஐப் பாவிக்குமாறு மைக்ரோசொப்ட் ஆலோசனை _

அபாயங்களுடன் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் அபாயத்துக்குள் தள்ள முடியாது-ஆஸி பிரதமர்

Labels:
ஆஸி பிரதமர்
Saturday, July 3, 2010
மொபைல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி...

Labels:
மொபைல் போன்
தொல்காப்பியம்

Labels:
தொல்காப்பியம்
தொல்காப்பியத்தில் காதல்
தொல்காப்பியர் களவியல், கற்பியல் இரண்டு பகுதிகளிலும் காதலைப்பற்றி மிகுதியாக கூறுகிறார். இரண்டிலும் உணர்ச்சிவழி செயல்பாடுகளைக் கூறுகிறார். எனினும் அச்செயல்பாடுகள் அறிவு வழி செயல்பாடுகளாக மாறிவிடுவதையும் காட்டிச் செல்கிறார். அதனால் தொல்காப்பியர் காலத்துக் காதலர்கள் எல்லாம் உணர்வழி அகற்றி, அறிவு வழி காதலித்தனர் என்றால் அது நகைப்பிற்கு இடமாகும். உணர்வுவழி காதலர்களாகும் ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு பின்னும் காதலர்களாக இருக்க அறிவுவழி செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தையே களவியல், கற்பியல் ஆகிய பகுதிகளில் கூறுகிறார் என்பது கட்டுரையாளரின் கருத்து. கம்பன் கொடுப்பாரும், கொள்வாரும் இன்றி எல்லா வளமும் எல்லாரும் பெற்று வாழவேண்டும் எனத் தான் விரும்பிய சமுதாயத்தை அயோத்தி சமுதாயமாகப் படைத்துக்காட்டினான் என்பர். அதுபோல காதலர்கள் களவிலும், கற்பிலும் செயல்படவேண்டிய தன் விருப்பங்கள் தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் படைத்துக்காட்டுகின்றார்.
தெய்வம் கூட்டவோ, அல்லது விதி வழியாகவோ ஆணும், பெண்ணும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக் கொள்கின்றனர். இச்சந்திப்பு அவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பார்க்கின்ற எல்லா ஆண் அல்லது பெண்ணால் தாக்கம் ஏற்படுவதாகக் குறிக்கப்படவில்லை. பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உறவு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு ஆகிய பத்து ஆளுமைக்குணங்கள் ஒன்றுபட்டிருக்கும். ஆணும் பெண்ணும் எதிர்படும்பொழுது இத்தாக்கம் ஏற்பட்டுப் பின் அது குறிப்பால் ஒருவர் எண்ணத்தை ஒருவர் அறிந்தபின் காதலாக மாறுவது நலம் என்பது தொல்காப்பியர் கருத்து. தமிழ்ச் சமுதாயம் தொல்காப்பியர் காலத்திலேயே ஆணாதிக்கச் சமுதாயமாக இருந்துள்ளது. எனவே மேற்கூறிய பத்து ஆளுமைகள் சிலவற்றில் மிக்கோனாக ஆண் மகன் இருப்பினும் எனக் கூறுகிறார். இன்றைய வாழ்விலும் இவ் ஆளுமைகள் ஒத்து இருக்குமேயானால் இவ்வாழ்க்கையில் உரசல்கள் தவிர்க்கப்படுவது உறுதி. எனினும், இக்குணங்கள் ஒத்தில்லாத தம்பதியர் ஒத்து வாழ்வதையும், இன்றைய நாளில் காண முடிகிறது. தொல்காப்பியர் காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் அறிவுவழி செல்ல வேண்டும் என்பதை அவர்களின் முதல் சந்திப்பிலேயே எச்சரித்து விடுகிறார். மேற்கூறிய பத்து ஆளுமைகள் பெரும்பான்மை ஒத்து இல்லாவிட்டால் அது பிரிவுக்கு வழி வகுக்கும் என்பதே அவர் கருத்து என அறியப்படுகிறது.
சந்தித்த ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்ட பின்பு ஒருவர் விருப்பத்தை இன்னொருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் இதற்கு வாய் வார்த்தைகள் தேவையில்லை. கண் என்னும் ஊடகத்தின் வாயிலாகக் கருத்தை சொல்பவர் கேட்போரிடம் எவ்வகைத் தடங்கலுமின்றி தெரிவித்திட முடியும் என்கின்றார் தொல்காப்பியர்.
நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரையாகும்
பத்துக் குணங்களின் ஒன்றாகிய அறிவால் ஒத்த ஆண் பெண்ணால் தான் பிறர் அறியாமல், வாய்மொழி இல்லாமல் உள்ளக் கருத்தை ஒருவருக்கொருவர் தெளிவாக உணர்த்த முடியும் என்பது தொல்காப்பியர் எண்ணம். ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான பத்து ஆளுமைக் குணங்களைக் கூறிய தொல்காப்பியர் பெருமையும், உரனும் ஆணுக்குத் தேவையான கூடுதல் ஆளுமைப் பண்புகளாகக் குறிப்பிடுகிறார்.
பெருமையும் உரனும் ஆடுஉ மேன
அறிவு, ஆற்றல், புகழ், கொடை, ஆராய்தல், நல்லொழுக்கம், நட்பு, பழி பாவம் அஞ்சுதல் ஆகியவை பெருமைக்கும், பிடிப்பான கொள்கை, கலங்காத துணிவு உரனுக்கும் பொருளாகக் கூறப்படுகிறது.
ஆண்மகன் இல்லறத் தலைவனாகிற அதே நேரத்தில் சமுதாய நடவடிக்கைகளிலும் பங்கு கொள்கிறான். இல்லறம், சமுதாயம் இரண்டிலும் அறிவும், நற்குணங்களும், கொள்கைப் பிடிப்பும் முடிவெடுக்கும் துணிச்சலும் அவசியம் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அதேபோல் வீட்டில் மட்டும் தலைமை ஏற்கும் பெண்ணுக்கு அவர்கால வழக்கப்படி சில ஆளுமைப் பண்புகளைக் குறிப்பிடுகிறார்.
அச்சமும், நாணமும், மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய
என்கிறார். இக்காலப் பார்வைப்படி இச்சொற்கள் பெண்ணடிமைத்தனத்தின் செயல்பாடு என்றாலும், அக்காலச் சமுதாய அமைப்பை நமக்குக் கிடைத்திருக்கக் கூடிய இலக்சியச் சான்றுகள் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். மன்னர்கள் ஆட்சியின் கீழ் பரப்பரப்பற்ற - போட்டிகள் குறைந்த தேவைகள் குறைந்த - வேளாண்மை சிறுதொழில்கள் மட்டுமே உள்ள மனிதப் பண்புகள் நிறைந்த - மாறுபட்ட சிந்தனைகள் இல்லாத சமுதாயமாக இருந்த காரணங்களினால் பெண்களின் பங்களிப்பு சமுதாயத்திற்கு தேவைப்படாத காலமாய் இருந்தது. அதனால் பெண்ணின் வாழ்க்கை இல்லறத்திற்குள்ளேயே நிறைவு பெற்றது. அதனால் தொல்காப்பியர் காலப்பெண் அச்சம், நாணம், மடம் நிறைந்தவளாகவே இருந்திருப்பாள். ஆயினும் அறிவு நிரம்பப்பட்டவள் என்பதை உணர்த்துகிறார் தொல்காப்பியர்.
காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் தனித்திருந்த தங்கள் காதலை வெளிப்படுத்துகின்ற தருணத்தில் பெண் தன்னுடைய வேட்கையைத் தன் காதலனிடம் கூறமாட்டாள். காதலியின் அக உணர்வைப் புரிந்து கொண்ட காதலன் அவளிடம் கேட்கும் பொழுது கூட அதைத் தன்வார்த்தைகளால் கூறாது புதுமண்கலத்தில் ஊற்றப்பட்ட நீரானது புறத்தே கசிவது போல தன் குறிப்பால் வெளிப்படுத்துவாள் என்கின்றார். தனித்திருக்கும் வேளையிலும் தன் புலன்களை அடக்கும் ஆளுமைப் பண்புகொண்ட அறிவுசால் பெண்ணின் தலைமை இல்லறத்தை இனிது நடத்தும் என்பதை தொல்காப்பியர் புலப்படுத்துகிறார். காதல் வயப்பட்ட பெண் வரம்புக் கடக்காதவளாக இருத்தல் நலம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். காதலனும், காதலியும் பழகும் காலத்தில் யாருக்கும் தெரியாமல் சந்திக்கும் இடத்தைப் பெண்தான் தீர்மானிக்கிறாள். காரணம் தனக்குப் பாதுகாப்பாகவும், தங்கள் காதல் குறிப்பிட்ட காலம் வரை பிறர்க்குத் தெரியாமல் இருப்பதே நலம் என்று கருதியும் காதலி சந்திக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஆண் மகன் வரம்பு மீறினால் அதுகூட அவளுக்கு அறமில்லை என்ற காரணமும் இப்பொறுப்பை அவள் ஏற்கச் செய்கிறது.
அவன் வரம்பிறத்தல் அறந்தனக்கின்மையின்
களம் சுட்டும் கிளவி கிளவியதாகும்
தான் செலற்குரிய வழியாகலான
என களவுக் காலத்திலும் பெண்உணர்வுவழி ஒதுக்கி அறிவுவழிச் செல்ல வேண்டுமென விரும்புகிறார். திருமணத்திற்கு பின் பெண்ணுக்கு சில கூடுதல் பொறுப்புகள் அவசியம் என்கின்றார்.
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
என்கின்றார். அறிவு முதலான பத்து ஆளுமைக்களைக் கொண்ட பெண்ணால்தான் எப்படிப்பட்டச் சூழலிலும் ஆணின் அன்பு மாறுபட்டு சென்ற காலத்தும், கற்பு, காமம், ஒழுக்கம், மென்மை, பொறை, நிறை, விருந்து, சுற்றம் காக்க முடியும் என்பது காப்பியர் கருத்து. பெண்ணுக்கு மேலும் சில கூடுதல் பண்புகளைக் கூறுகிறார்.
தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக்கிழத்திக்கும் உரித்தென மொழிப
அதுபோல் தலைவனின் புகழுக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ளுதலையும் வலியுறுத்துகிறார். கணவன் தன்னோடு ஒத்த சிறப்புகள் அல்லது மிக்க சிறப்புகள் கொண்டவனாயிருப்பினும் பெண் அவனிடம் தன்னைப் புகழ்ந்து கூறுதலைத் தவிர்த்து விடுதல் அவசியம் என்கின்றார்.
தற்புகழ் கிழவி கிழவன்முன் கிளத்தல்
எத்திறத்தானும் கிழத்திக்கில்லை
இவ்விடத்தில் தொல்காப்பியர் ஆணின் உளவியலை ஆண் வழி நின்று விளக்குகிறார். மிக்க அன்புடையவனாக இருப்பினும் மனைவி உண்மையிலேயே தன்னைவிட உயர்ந்தவளாக இருந்தாலும் ஆண்மனம் அதை ஏற்றுக் கொள்ளாது. மாறாக, எதிர்ச்செயல்களை விளைவிக்கும் என்பதை சமுதாயம் வழி நின்று விளக்குகிறார். இச்சமுதாயம் பெண்ணைவிட ஆணே உயர்ந்தவன் என்ற கருத்துடையது. அக்கருத்தே ஆண்மகன் எண்ணத்திலும் ஊறியிருக்கும். எனவே குடும்பத்தில் இலக்கணம் குறைய வாய்ப்புள்ளது என்பதால் அதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்.
தொல்காப்பியர் ஆணாதிக்கச் சமுதாயத்தைச் சார்ந்தவர். அக்காலச் சமுதாயத்தில் தோன்றிய ஆண் பெண்ணுக்கு இடையே ஏற்படும் காதலைக் கூறுகிறார். இல்லறத்தில் கணவன் மனைவியாக நுழையப்போகும் களவியல் காதலன் காதலிக்குத் தேவையான பத்து ஆளுமைப் பண்புகளைக் குறிப்பிட்டு களவு கற்பு இருகாலத்திலும் உணர்ச்சிவழிக் காதலை அறிவுவழிச் செலுத்தினால் நல்ல இல்லறத் தலைவர்களாக முடியும் என்கின்றார். பொதுவான ஆளுமைப் பண்புகளைக் குறிப்பிட்டு இருவருக்கும் தேவையான தனிச்சிறப்பு ஆளுமைப் பண்புகளையும் குறிப்பிட்டு பெண்ணுக்கு தேவையான கூடுதல் பொறுப்புகளையும் சுட்டிக்காட்டுகிறார். அவர் குறிப்பிட்ட குணநலன்களை உடைய ஆணும், பெண்ணும் வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவை என்னும் தன் விருப்பத்தை களவியல், கற்பியல் ஆண் பெண் மீது ஏற்றிக் கூறுகிறார். இப்பண்புகளை உடையோரின் காதல் வாழ்க்கை சிறக்கும் என்பது தொல்காப்பியரின் கருத்து.
நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்
Labels:
தொல்காப்பியம்
தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு

Labels:
தமிழுக்கும் எழுத்து
40 மொழிகளிலான இணையத்தள உலாவி கூகுளால் ஆரம்பித்து வைப்பு
