Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Wednesday, June 8, 2011

விண்வெளியில் விவசாய பண்ணை

பைகானூர் : சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை அமைப்பதில் ஜப்பான் விஞ்ஞானி தீவிரமாக உள்ளார். அமெரிக்கா, ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுவானில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றன. சோயுஷ் விண்கலம் மூலம் சென்று அங்கு ஆய்வகம் (பரிசோதனை கூடம்) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்ட மிட்டுள்ளன. இந்நிலையில் நாளை (புதன்கிழமை) சோயுஷ் விண்கலம் முலம் விண்வெளி வீரர்கள் சதோஷி புருகவலா (ஜப்பான்), செர்ஜி வல்கோவ் (ரஷியா), மைக்கேல் போசும் (அமெரிக்கா) ஆகியோர் சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்டு செல்கின்றனர். அதற்காக கஜகஸ்தானில் உள்ள பைகாணர் விண்வெளி தளத்தில் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி வீரர் சதோஷி புருகவலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாளை புறப்பட்டு செல்லும் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதம் தங்கி ஆய்வக பணியை மேற்கொள்ள இருக்கிறோம். அப்போது அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் வெள்ளரிக்காய் பயிரிட்டு அறுவடை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே அவர்கள் உற்பத்தி செய்ய முடியும் என்றார். மேலும் அவர் கூறும்போது, விண் வெளியில் எங்களால் வெள்ளரிக்காய்களை சாப்பிட முடியும். ஆனால் அதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை என்று நகைச்சுவையுடன் கூறினார். ரஷிய விண்வெளி வீரர் செர்ஜி வால்கோவ் கூறும்போது, விண்வெளி மையத்தில் சாலட் தயாரிக்க அனுமதி அளித்தால் அங்கு தக்காளியை உற்பத்தி செய்ய வும் தயாராக இருக்கிறோம். எனக்கு வறுத்த உருளைக்கிழங்கும் சாப்பிட பிடிக்கும் என்று நகைச்சுவை உணர்வுடன் கூறினார்

Friday, June 3, 2011

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலைத் திருப்பலியின் பின் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 09 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பலி பூசைகள் தமிழிலும் நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கள மொழியிலும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சிங்கள மொழியிலும் மாலை 6 மணிக்கு தமிழிலும் பூசைகள் நடைபெறும். 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் மாலை 6 மணிக்கு சிங்கள மொழியிலும் 8 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு தமிழிலும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கள மொழியிலும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மாலை 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலி பூசைகள் நடைபெறும். எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மறைமாவட்ட முன்னாள் ஓய்வு பெற்ற பேராயர் அதி வணக்கத்திற்குரிய நிக்கலஸ் மாக்கஸ் ஆண்டகையின் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறவுள்ளது. இறுதி நாளான 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தமிழிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் மீண்டும் காலை 6 மணிக்கு தமிழிலும் 7 மணிக்கு சிங்கள மொழியிலும் திருப்பலி பூசைகள் நடைபெறும். அத்துடன் காலை 8 மணிக்கு தமிழிலும் 10 மணிக்கு சிங்கள மொழியிலும் நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்திலும் திருநாள் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருச்சுருபப் பவனியும் அதனைத்தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெறும்.

Thursday, June 2, 2011

வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் தொற்று நோய்!

ஜெர்மனி: வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் வரும் இ-கோலி பாக்டீரியாவானது எப்போது முடிவுக்கு வருமென தெரியாதெனவும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் ஜெர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார். இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளன. மேலும் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம்; சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலர் இப்பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்துள்னர். இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. இதேவேளை ஜெர்மனியின் ஹம்பேர்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கர்கள் இருவருக்கும் இ-கோலி தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவீடனிலும் இத்தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.