Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Wednesday, June 16, 2010

உங்கள் கைகளில்

அண்மையில் வெளியான திரைப்படம் 2012. திரைப்படத்தை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி... அதுதான் உலகம் முற்றாக அழிந்துவிடுமே என்று ... அனேகமானார் 2012 திரைப்படம் பார்ப்பதை தவிர்த்தனர். இத்திரைப்படத்தை நோக்கினால் உலகம் அழியும் விதத்தை கிராபிக்ஸ் மூலம் மிகவும் தத்தரூபமாக படமாக்கியுள்ளார் இயக்குனர். 2012 ஆம் ஆண்டுக்கு பின் உலகமே இல்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டார் இயக்குனர். சரி திரைப்படம் ஒரு பக்கம் இருக்கட்டுமே உலகைப் பார்ப்போம் அண்மைக்காலமாக உலகெங்கும் இயற்கை அனர்த்தங்கள் சற்று அதிகரித்து பின் அவற்றின் பின்விளைவுகளும் சற்று கூடவாகவே காணப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணம் சுனாமி. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 24 மறக்கமுடியாதநாள். பல லட்சமான உயிர்கள், உடைமைகள் காவு கொள்ளப்பட்டநாள். சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் ஏற்பட்ட விபரீதம் இது. சுனாமிக்கு பின்பும் அடிக்கடி சுமத்திரா தீவைச் சூழ்ந்துள்ள கடற்பகுதியில் தொடர் நடுக்கங்கள். இவற்க்கெல்லாம் பதில் இன்னும் கிடைக்கவில்லை. புவி ஆய்வியலாளர்களின் கருத்து வழமையானதே அதாவது நில நடுக்கத்தின் போது தரை பிளவடைகின்ற கதைதான். சரி நடைபெற்றதுமுடிந்தது இனி நடைபெறாமல் தவிர்ப்பது எப்படி இதற்கு விடையில்லை. அண்மையில் குவாட்டமாலாவில் ஏற்பட்ட பாரிய குழி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். 100 அடி குழி பல கட்டடங்களை விழுங்கிவிட்டது. பல நூற்றுக்கணக்கான மக்களும் காவு கொள்ளப்பட்டனர். இப்பகுதியில் வீசிய உரமான காற்றுக்கே இவ்வாறான நிலை ஏற்பட்டது என கருத்து. சென்ற கிழமை சீனாவிலும் இவ்வாறான ஒரு குழி. இவையனைத்தும் இயற்கை அழிவு என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. ஆனால் இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்பாக எமது மக்கள் என்ன செய்தார்கள் என சற்று அலச வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். (தொடரும்)