
கொழும்பு நகரில் வாகனம் செலுத்துவோரில் அனைவருமே அரசாங்க வாகன அனுமதிப் பத்திரம் பெற்றவர்களே.. ஆனால் அவர்களில் சிலர் முறையாக வீதிகளில் வாகனங்களை செலுத்துவதாக தெரியவில்லை.
வீதி முறைகளை மீறியும், Track மாறும் போது Signal காட்டாதும் அவர்கள் எண்ணப்படியே செலவதால்தான் அனேக விபத்துக்கள் நடைபெறுகின்றன.
இது இவ்வாறு இருக்க முச்சக்கரவண்டி மற்றும் Mணிtணிணூ ஞிதூஞிடூஞு செலுத்துவோரில் சிலரைப் பார்க்கவா வேண்டும். அவர்களின் வெட்டு வை பார்க்க கண்கள் கோடி... ஏன் பெரிய பஸ்வண்டிக்காரனைப்பார்த்தால் காட்டுக்குள் யானையைவிரட்டுவதற்கு உபயோகிக்கும் கோன் அல்லவா அடிக்கிறான்...
அவனுக்கு பொறுமை என்பது அறவே இல்லை. வீதி traffic ஆகும் போது ஒரு வாகனங்களும் நகரமுடியாது என்ற கோட்படே தெரியாதவர்கள் எல்லோரும் எவ்வாறு வீதிகளில் நடமாடுகிறார்களோ ....
இது போக வாகனங்களில் உள் அமர்ந்திருந்து பிரயாணம் செய்பவர்கள் கூடத வறு செய்கின்றனர். யன்னல் ஓரத்தில் இருந்து துப்பும் போது அது வீதியால் பயணிப்போர் மீதுதான் படும் என்ற எண்ணமோ, சிந்தனையோ இல்லை...
நான்முந்தி, நீமுந்தி என்ற சுலோகத்தை மறந்து எதிலும் விட்டுக்கொடுத்து விபத்தை நிறுத்துவோம்.
- ரிவோ