Friday, June 25, 2010
குடாநாட்டுச் சந்தைகளில் திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
யாழ். குடாநாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
திருநெல்வேலி, சுன்னாகம், மருத னார்மடம் போன்ற சந்தைகளிலேயே மரக்கறி வகைகளின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளன. தற்போது பெய்துவரும் பருவம ழையே இந்த மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக திருநெல்வேலிச் சந்தையில் மரக்கறி வகைகளின் நேற்றைய விலை விபரம் வருமாறு:
கத்தரிக்காய் கிலோ 130 ரூபா, பயிற் றங்காய் கிலோ 90 ரூபா, உருளைக் கிழங்கு கிலோ 80 ரூபா, கோவா கிலோ 80 ரூபா,
கரட் கிலோ 90 ரூபா, தக்காளிப்பழம் கிலோ 70 ரூபா, பச்சைமிளகாய் கிலோ 240 ரூபா, வெங்காயம் கிலோ140 ரூபா, முருங்கைக்காய் கிலோ 280 ரூபா, கீரைப்பிடி ஒன்று 30 ரூபா.