
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள புனித அன்னமாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று காலை 8.30 மணிக்கு நடை பெற்றது.
ஆலயத்தின் நூற்று அறுபதாவது ஆண்டாக இந்த நிகழ்வு இடம் பெற்றுளள்மைகுறிப்பிடத்தக்கதாகும் உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் குடியேற அனுமதிக்கப்படாத வலி தூண்டல் பகுதியில் இந்த தேவாலயம் அமைந்துள்ள போதிலும் படைத்தரப்பினரின் அனுமதி பெறப்பட்டு இன்று திருவிழா திருப்பலி ஓப்புக் கொடுக்கப்பட்டது.
திருப்பலியை அருட்தந்தை அருள்நேசன் அடிகளார் நிறைவேற்றினார் இவருடன் பங்குத் தந்தை ஞானேந்திரன் அருட்தந்தை அன்ரனிதாஸ் அருள் தந்’தை ஜோர்ஜ் அருள் தந்தை ஜெயசீலன் அருள்தந்தை சதீஸ் ஆகியொரும் கலந்து கொண்டார்கள் .
இன்றைய நிகழ்வில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதுடன் படையினரின் அனுமதி பெற்றதின் காரணமாக தமது சொந்தப் பகுதியில் பிற்பகல் 3.00 மணிவரை தங்கிச்செல்வதற்க்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.