Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Tuesday, January 25, 2011

இலங்கையில் உயரமான விஷ்ணு தேவாலயம்

இலங்கையின் மிக உயரமான விஷ்ணு தேவாலயம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்துடன், சமாதான கோபுரத்தையும் அக்கோயில் கொண்டுள்ளது. சிலாபத்தை அண்டிய உடப்பு பிரதேசத்தில் இன்று காலை சுப முகூர்த்தத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள அக்கோபுரத்தின் உயரம் 108 அடிகளாகும். அதன் இராஜகோபுரத்தில் சமாதானக் கோபுரம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் நிலவிய காலகட்டத்தில் சமாதானத்தை வேண்டி நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இக்கோயில் ஏழு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயரமான வணக்கஸ்தலங்கள் வரிசையில் இக்கோயில் இரண்டாம் இடத்தைக் கொண்டுள்ளது.