
பல மாதங்களாக எதிர்பார்த்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று கோவையில் துவங்கியது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மாநாட்டை துவக்கி வைத்தார். 50 நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கில் "கொடீசியா' வளாகத்தில் குவிந்துள்ளனர். இம்மாநாட்டிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை உரையாற்றினார். அவர் கூறியதாவது: உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது வழங்கி உரையாற்ற இருக்கும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இங்கு வருகைபுரிந்திருக்கிறார். இவர் தமிழ் மற்றும் தமிழ்மக்கள் மீது கொண்ட அன்பு, பற்று காரணமாக இங்கு வந்துள்ளார். இவர்களுக்கு உலகத்தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மடை திறந்த வெள்ளமாக இங்கு திரண்டு வந்திருக்கும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.தமிழ் மொழி உலகின் முதல் மொழி என்ற தகுதி படைத்தது. அஞ்சுகம்- முத்துவேலர் மகனாக பிறந்து 14 வயது முதல் தமிழ் வளர்க , வெல்க என்று எழுதி புறப்பட்டேன். 20 வயதில் சேரன் என்ற புனைப்பெயரில் முரசொலியில் எழுதினேன். அண்ணா, பெரியார், அன்பில் வளர்ந்து தமிழே ஆயுதமாக கொண்டு கதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், நாவல் என பல துறையில் பணியாற்றினேன். ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழுக்காக உ<ழைத்தேன், 8 முறை தமிழ் மாநாடு நடந்திருக்கிறது. ஏற்கனவே நடந்ததது தமிழ்மாநாடு, தற்போது நடப்பது உலக்கத்தமிழ்ச்செம்மொழி மாநாடு ஆகும். இந்த 3 சொற்களும், பொருளும், பொருத்தமும் கொண்டது. உலக அளவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், தமிழ் மொழிக்கும் வித்தியாசம் உண்டு. சிந்து சமவெளி நாகரிகம் துவங்கியது முதல் 40 ஆண்டுகாலமாக பல்வேறு அறிஞர்கள் தமிழுக்காக தொண்டாற்றியுள்ளனர். பெரும் புகழ் கொண்ட தமிழ்மொழியை செம்மொழியாக்கிட தி.மு.க., காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசின் உதவியுடன் முடிந்தது. இந்த மாநாடு இன்னும் ஆய்வுக்கான திட்டங்களை வகுக்கவும் பயன்பெறும் இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.