Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, January 2, 2011

புத்தாண்டில் ஒரு அதிசயம்: பிறந்தது விசேஷச குழந்தை!

புதியாய் பூத்த புத்தாண்டே பல அதியசங்களை கொண்டதாக உள்ளது. இந்நிலையில் புத்தாண்டில் மேலும் ஒரு விந்தையான நிகழ்வாக ஒரு விசேஷச குழந்தை பிறந்தது. கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடப்பட்ட வேளையில், குஜராத் மாநிலத்தில் சூரத் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு நேற்று குழந்தை பிறந்தது. இதில் அதிசயம் என்னவென்றால், அக்குழந்தை பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் என எல்லாமே 1 தான். அதாவது, 1.1.11 அன்று இரவு 1மணி 11 நிமிடத்தில் இக்குழந்தை பிறந்தது. இக்குழந்தையும் அதன் வாழ்க்கையில் முதல் இடத்தைப் பெற நாமும் வாழ்த்துச் சொல்வோமா!