Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Tuesday, January 11, 2011

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் மழை

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதனால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெரும் பாதிப்பினை சந்தித்துள்ளதுடன் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் உரிய வகையில் உணவு, குடிநீர் இன்றியும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். வெள்ளத்தினால் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்பிவைப்பதிலும் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது உணவு கிடைக்குமா என பெருமளவு மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்கள் சிலவற்றில் தங்கியுள்ள மக்களுக்கு பாய் படுக்கைகளோ, சமையல் பாத்திரங்களோ இல்லாத நிலை காணப்படுகின்றது. தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 22 ஆயிரத்து 743 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி நேற்று வரை 185 நலன்புரிநிலையங்களில் 28 ஆயிரத்து 376 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 5 ஆயிரத்து 747 பேர் தங்கியுள்ளனர். அத்துடன் 57 ஆயிரத்து 659 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 16 ஆயிரத்து 996 பேர் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 863 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 2 ஆயிரத்து 885 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட செயலகத்திலனால் நேற்றுக் காலை வெளியிடப்பட்ட அறிக்øகயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தத்øதத் தொடர்ந்து 48 ஆயிரத்து 576 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 82 ஆயிரத்து 615 பேர் நேற்றுவரை வாழ்வாதார தொழில்களை இழந்துள்ளனர். 4 ஆயிரத்து 448 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 856 விவசாயிகளின் பயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் தங்கியிருந்த முருக்கன்தீவைச் சேர்ந்த 4 மாத கைக்குழந்தை கடும் குளிர் காரணமாக திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளது. வேலாயுதம் அனோஜா எனும் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. கடந்த 8ஆம் திகதி முருக்கன்தீவு பூலாக்காடு பிரதேசத்திலிருந்து வெள்ள அபாயம் காரணமாக படகு மூலம் இக்குழந்தை உட்பட குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டிருந்தனர். உரிய மருத்துவ வசதியின்றியே இந்தக் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டு. மாவட்டத்தில் மிக மோசமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த பாதிப்பைத் தொடர்ந்து நேற்றுக்காலை மாவட்ட செயலகத்தில் அவசர மாநாடு நடத்தப்பட்டது. அனர்த்த முகாøமத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இம்மாநாடு இடம்பெற்றது. வெள்ள அனர்த்தத்தில் சிக்கியுள்ளவர்களது முழுமையான விபரங்களை சரியாக பெற்றுக்கொள்வதில் அரசாங்க அதிகாரிகள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் குளங்கள் பல உடைப்பெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மாவட்டத்தில் பல வீதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை காரணமாக வீரக்கொடை வாவி உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனல் வாவியை அண்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கடுக்காமுனை குளத்தின் கட்டுகள் 2 இடங்களில் வெட்டப்பட்டு உடைப்öபக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டபோதிலும் அது தொடர்பில் விசேட கண்காணிப்பு ÷மற்கொள்ளப்பட்டு வருகிறது. அ÷தபோன்று புளுகுநாவி குளமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 31 அடி உயரமுடைய நவகிரி குளத்தின் அணைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து நவகிரி நீர்ப்பாசன பொறியிலாளர் எஸ். கேமகாந் அங்கு நிலைகொண்டு குளத்தினை கண்காணித்து வருகின்றார். மழை தொடர்ந்து பெய்தவண்ணம் இருப்பதாலும் காட்டு வெள்ளம் பெரருகி வருவதாலும் குளங்களிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக வாவியை அண்டியுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். மட்டக்களப்பு திருகோணமலை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் ஸ்தம்பித்துள்ளது. மட்டு. கொழும்பு புகையிரத சேவைம் இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை. நாளாந்தம் கூலி வேலை öசய்து ஜீவனோபயம் நடத்தும் தொழிலாளர்கள் பட்டினிச் சாவினை எதிர்நோக்கும் நிசை ஏற்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் சமைத்த உணவு வழங்கப்படுவதனால் இத்தகையவர்கள் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர். கால்நடைகளும் தரித்துநிற்கவு>ம் முடியாமல் அவதியுறுகின்றன. மேய்ச்சல் தரைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையில் கால்நடைகள் உண்ண உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாறையில் ... அம்பாறை மாவட்டத்திலும் தொடர்ச்சி யாக பெய்துவரும் அடை மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்றும் கடும் மழை பெய்ததனால் பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. இதனால் வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருகின்றது. அம்பாறையிலும் 81 ஆயிரத்து 574 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 12 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 875 பேர் இடம்பெயர்ந்து 41 தற்காலிக முகாம்களிலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலியோடை ஆற்றின் பெருக்கத்தால் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் பல கட்டடங்கள் நீரினால் சூழப்பட்டுள்ளன. சில கட்டடங்களுக்குள் மழைநீர் உட்சென்றுள்ளது. கல்முனை அம்பாறை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவடிப்பள்ளடி பாலத்தின் மேலாகவும் அதனை அண்டிய பகுதிகளிலும் வெளளம் 2 அடிக்கு பாய்கிறது. இதனால் கனரக வாகனங்களில் மட்டுமே பயணிக்கக்கூடியதாக உள்ளது. கல்முனை மத்திய முகாம் வீதிப் போக்னுகுவரத்தும் அக்கரைப்பற்று பொத்துவில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ன. சொறிக்கல் முனைக்கான போக்குவரத்தும் பாதிக்ப்பட்டுள்ளது. நிந்தவூர், காரைதீவு, அட்டாளைச்சேனை, ஆலையடி, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, கல்முனை, பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் வெள்ளத்தினால் பெரும் பாதிப்பினை சந்தித்துள்ளன. இங்கு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உரிய வøகையில் உணவு குடிநீர் என்பன வழங்கப்படவில்லை எனவும் நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.