Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, May 29, 2011

ஆசியாவில் பிரபலமான சிங்கப்பூர் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.எந்திரன் படித்தை முடித்த பிறகு, ‘ராணா’ திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டார். கடந்த 29ம் தேதியன்று, ‘ராணா’ படப்பிடிப்பு தொடங்கிது. அப்போது, உடல்நிலை சரியில்லாத நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் ரஜினி சேர்க்கப்பட்டார். சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்ற அவர், தீவிர சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கடந்த 2 வாரங்களாக ரஜினிகாந்துக்கு, சென்னையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிங்கப்பூரில் உயர் மருத்துவ சிகிச்சை பெற திட்டமிட்டு, நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர், விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அவர் குடும்பத்துடன் சென்றார்.சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மெடிக்கல் சென்டர் என்ற பெரிய மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேற்று சேர்க்கப்பட்டார். மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் வந்ததும், சிங்கப்பூர் டாக்டர்கள் அவரை அழைத்துச் சென்று தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த தனி வார்டில் அனுமதித்தனர். அங்கு விரைவில் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை ஆசிய கண்டத்தில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும். இதே மருத்துவமனையில்தான் கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, May 28, 2011

இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்

இணையதளத்தை பயன்படுத்தாத சிறுவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எந்த நேரம் பார்த்தாலும் குழந்தைகள் இணையதளத்தை பார்வையிடுவதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. இத்தகைய நிலைபாட்டால் தங்கள் குழந்தைகள் தனிமை நிலைக்கு ஆளாகி விடுவார்கள். அவர்களுக்கு குடும்ப பாசம் இல்லாமல் போய்விடும் என்ற கவலை பெற்றோர்களுக்கு உள்ளது. இந்த நிலையில் மூனிச்சின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் ஆறுதலான தகவல் கிடைத்துள்ளது. குழந்தைகள் இணையதள தேடல்களை மேற்கொள்வதால் அவர்களது சமூக நடவடிக்கைகள் மேம்படுகின்றன என்று அவர்கள் கூறி உள்ளனர். குறிப்பாக இளம் சமூகத்தினருக்கு சமூக செயல்பாடுகளில் ஆர்வம் தூண்டுவதாக இணையதள பயன்பாடு உள்ளது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தள தேடல்களில் ஆர்வம் கொண்டவர்கள் எப்போதும் கணணி முன்பாக அமர்ந்து இருப்பதால் அவர்கள் தனித்து விடப்படும் அச்சம் உள்ளது. அந்த அச்சத்தை போக்கும் வகையில் இந்த புதிய ஆய்வு தகவல்கள் அமைந்துள்ளன. வீட்டில் இணைய இணைப்பு இல்லாத குழந்தைகள் பள்ளிக்கு வெளியே ஏதேனும் ஒரு செயல்பாடுகளிலேயே தொடர்பு வைத்துள்ளனர். குறிப்பாக அத்தகைய குழந்தைகள் விளையாட்டு அல்லது ஏதேனும் ஒரு கலை நிகழ்ச்சியில் தொடர்பு வைத்துள்ளனர். ஆனால் இணையதள பயன்பாடு உள்ள குழந்தைகள் பள்ளிக்கு வெளியே 2 செயல்பாடுகளில் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் 18 ஆயிரம் பருவ வயதினர் மற்றும் 250 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இணையதள பயன்பாடு உள்ள நபர்கள் அதிக சமூக நடவடிக்கைகளில் தொடர்புள்ளவராக இருப்பது தெரியவந்தது.

Thursday, May 19, 2011

நலமாக இருக்கிறார் ரஜினி, ரசிகர்கள் பயப்பட வேண்டாம் : லதா ரஜினிகாந்த்!

சென்னை: நுரையீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு போரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி 'ராணா' பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்துக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மயிலாப்பூரிலுள்ள இசபெல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பினார். மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் இசபெல் மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு மூச்சு திணறல் அதிகமானது. இதையடுத்து போரூரிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்குள்ள 7வது மாடியில் தனி அறையில் அவருக்கு நுரையீரல், சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இந்நிலையில் நேற்று, ரஜினிக்கு மூச்சு திணறல் அதிகமானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளிட்ட அறிக்கையில், 'மூச்சு விடுவதை எளிதாக்கும் விதத்தில் ரஜினியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறோம். இதன் மூலம் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது' என தெரிவிக்கப்பட்டது. நேற்று அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நுரையீரல் பிரச்னை காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அள¤க்கப்படுகிறது. தொடர்ந்து இன்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நலமோடு உள்ளார் ரஜினிகாந்த் : லதா ரஜினிகாந்த்! நடிகர் ரஜினிகாந்த் நலமோடு உள்ளார் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். வயிற்றுக் கோளாறு, சுவாசப் பிரச்னைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் நேரடி பராமரிப்பிற்காகவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உறுப்புகளின் சமநிலையைப் பராமரிக்கவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி வருகின்றன என்றும் லதா தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு தடை; போலீஸ் குவிப்பு ரஜினியின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக, அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் ரசிகர்கள் குவிகின்றனர். ‘ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு ரசிகர்கள் வர வேண்டாம்’ என்று மருத்துவமனை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனாலும், ரசிகர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். உடல்நிலை பற்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரிவர பதில் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். ரஜினி சிகிச்சை பெறுவது போன்ற போட்டோவையாவது பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று கேட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் ரசிகர்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்களுக்கும் மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் : மருத்துவர்கள் தகவல் இந்நிலையில், சுவாசக் கோளாறை குணப்படுத்த ஐசியூ வில் ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொண்டு ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ரஜினிக்காக ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை! ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூரிலிருந்து ரசிகர்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். ரஜினிகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம் : ரசிகர்களுக்கு கோரிக்கை! ரஜினிகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு ரசிகர்கள் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. குணமடைந்து வரும் ரஜினி விரைவில் ரசிகர்களை சந்திப்பார் என்று உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் வருவதை தடுக்க மருத்துவமனை முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் குணமடைய திரூப்பூரில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை! ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். திருப்பூரில் “மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்” இயங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். தற்போது நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் சார்பில் திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தனர். ரஜினிகாந்த் வருவார்... திரையுலகை ஆள்வார்! கவிஞர் வைரமுத்து "ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வருவார். திரையுலகை ஆள்வார். நவீன மருத்துவத்தின் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது,'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். மேலும், உணர்ச்சி வசப்பட்டு எந்த ரசிகரும் வதந்திகளை நம்பி தவறான முடிவுக்கு தள்ளப்பட்டு விட வேண்டாம். ஏனென்றால் ரஜினியின் உயிரைப் போலவே உங்கள் உயிரும் உயர்ந்தது. உடல்களில்தான் பேதம் உண்டு. உயிர்களில் பேதம் இல்லை. எனவே மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான அறிக்கையை மட்டுமே நம்புங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார். ரஜினிக்காக தீபிகா படுகோன் பிரார்த்தனை! ரஜினி சாருடன் சேர்ந்து நான் இன்னும் நடிக்கவில்லை. அந்த நாளை நான் மிகுந்த பரவசத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று, ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன் என நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.