Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, May 29, 2011

ஆசியாவில் பிரபலமான சிங்கப்பூர் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.எந்திரன் படித்தை முடித்த பிறகு, ‘ராணா’ திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டார். கடந்த 29ம் தேதியன்று, ‘ராணா’ படப்பிடிப்பு தொடங்கிது. அப்போது, உடல்நிலை சரியில்லாத நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் ரஜினி சேர்க்கப்பட்டார். சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்ற அவர், தீவிர சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கடந்த 2 வாரங்களாக ரஜினிகாந்துக்கு, சென்னையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிங்கப்பூரில் உயர் மருத்துவ சிகிச்சை பெற திட்டமிட்டு, நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர், விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அவர் குடும்பத்துடன் சென்றார்.சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மெடிக்கல் சென்டர் என்ற பெரிய மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேற்று சேர்க்கப்பட்டார். மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் வந்ததும், சிங்கப்பூர் டாக்டர்கள் அவரை அழைத்துச் சென்று தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த தனி வார்டில் அனுமதித்தனர். அங்கு விரைவில் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை ஆசிய கண்டத்தில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும். இதே மருத்துவமனையில்தான் கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.