Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Wednesday, June 23, 2010

தமிழரென சொல்லிக் கொள்வது பெருமை தரும் : ஜார்ஜ்ஹார்ட் பெருமிதம்

""மகாகவி பாரதியாரின் கூற்றைப் போலவே, தமிழரெனச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ள வேண்டும்'' என மொழியியல் அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் பேசினார். செம்மொழி மாநாட்டு துவக்க விழாவில் பங்கேற்ற அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ்ஹார்ட் பேசியதாவது: மகாகவிபாரதியார் "நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்' என்ற பாடலில் தமிழர் எனச் சொல்லிக் கொள்வதன் பெருமை பற்றிக் கூறியுள்ளார். தனிச்சிறப்பு மிக்க தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்மையானது. தமிழகம், கேரளா, இலங்கை போன்ற பரந்த வெளிகளில் செவ்விலக்கியமாக பேசப்பட்டு வந்துள்ளது. அதன் தனிச்சிறப்பு மிக்க கவிகள், ஆன்றோர்களின் அனுபவம், மகிழ்ச்சி, வருத்தம் உள்ளிட்டவற்றின் சிறப்பான வெளிப்பாடாகும். கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி எழுதிய "உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் கொள்ளலர்' என்ற பாடலை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எவ்வளவுஉயரிய கருத்துகளை தமிழ்ப்பாடல்கள் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுவே சான்று. வேட்கைப்பத்து என்ற சங்க என்னும் பாடலில், "வாழியாதன் வாழியவனி' என்று தொடங்கும் அடிகளில் இருந்து மழை பல பொலிக, வருக இரவலர் என உலகு உய்ய தேவையான கருத்துகள் மட்டுமே கோரப்பட்டுள்ளன. இத்தமிழ் மாநாட்டில் பங்கு பெற்றமைக்காக பெருமைப்படுகிறேன், என்றார்.