Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Tuesday, January 25, 2011

இலங்கையில் உயரமான விஷ்ணு தேவாலயம்

இலங்கையின் மிக உயரமான விஷ்ணு தேவாலயம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்துடன், சமாதான கோபுரத்தையும் அக்கோயில் கொண்டுள்ளது. சிலாபத்தை அண்டிய உடப்பு பிரதேசத்தில் இன்று காலை சுப முகூர்த்தத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள அக்கோபுரத்தின் உயரம் 108 அடிகளாகும். அதன் இராஜகோபுரத்தில் சமாதானக் கோபுரம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் நிலவிய காலகட்டத்தில் சமாதானத்தை வேண்டி நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இக்கோயில் ஏழு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயரமான வணக்கஸ்தலங்கள் வரிசையில் இக்கோயில் இரண்டாம் இடத்தைக் கொண்டுள்ளது.

Friday, January 14, 2011

61 வருடங்களின் பின் கொழும்பில் கடும் குளிர்

18.8 பாகை செல்சியஸாக வெப்பநிலை குறைவு நுவரெலியாவில் 7.9 செல்சியஸாக வெப்பநிலை பதிவு 61 வருடங்களின் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் ஆகக் குறைந்த வெப்ப நிலை நேற்று பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தின் வெப்ப நிலை 18.8 பாகை செல்சியஸாகக் காணப்பட்டதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 7.9 பாகை செல்சியஸாகவும் மட்டக்களப்பில் 16.9 பாகை செல்சியஸாகவும் நேற்று வெப்ப நிலை காணப்பட்டதாகவும் அந்த நிலையம் அறிவித்துள்ளது. இந்தக் குளிர்கால நிலை இன்றும் நீடிக்குமென வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இதற்கு முன்னர் 1950 ஆம் ஆண்டிலேயே ஜனவரி மாதம் ஆகக் குறைந்த வெப்ப நிலையாக 15.2 செல்சியஸ் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, January 13, 2011

நாட்டில் தற்போது காணப்படும் சீரற்ற காலநிலை

* 400 குளங்கள் உடைப்பெடுப்பு * 2680 வீடுகள் முற்றாக சேதம் * 15274 வீடுகள் பகுதியளவில் சேதம் * 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவு * 7 வைத்தியசாலைகள் மூடப்பட்டன நாட்டில் தற்போது காணப்படும் சீரற்ற காலநிலையினால் 14 மாவட்டங்களில் 10 இலட்சத்து 81 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 23 பேர் உயிரிழந்தும் 36 பேர் காயமடைந்துமுள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளõர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் கணக்கிட முடியாத நிலை தற்போது நிலவுகின்றது என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதுவரையில் 591 முகாம்களில் 3 இலட்சத்து 25 ஆயிரத்து 348 பேர் உள்ளதுடன் இவர்களுக்காக கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் 75 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களை எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் பட்டினி போடவில்லை. ஜே. வி. பி.யும் ஐ. தே. க.வும் உண்மை நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே எம் மீது குற்றம் சுமத்த வேண்டும். எவ்விதமான மோசடிகளும் இடம்பெறாது பொது மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இடர் முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த சில நாட்களாக நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலையினால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பிலேயே கூடுதலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதேபோன்றே அம்பாறை, திருகோணமலை மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களிலும் மண் சரிவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுனாமியை விட மோசமான பாதிப்பாகவே தற்போதைய சீரற்ற காலநிலையை கூற முடியும். அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக 14 மாவட்டங்களில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 871 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2680 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 15 ஆயிரத்து 274 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துமுள்ளன. பல பிரதேசங்களில் படகுகள் மூலமே விநியோகங்கள் இடம்பெறுகின்றன. எனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடிய சந்தர்ப்பமே உள்ளது. எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவது போன்று சுற்றறிக்கைகளுக்கு கட்டுப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கவில்லை. கடந்த 2010 ஆண்டில் 294 மில்லியன் ரூபாவே அனர்த்தங்களின் போது செலவாகியது. ஆனால் கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. இத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாம். எவ்வாறாயினும் பொது மக்களுக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கிழக்கில் 7 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளது. புதிய நெடுஞ்சாலைகள் அழிந்து போயுள்ளன. இவற்றை சீர்செய்து மக்கள் வாழ்வை கட்டியெழுப்பும் சவாலும் அரசாங்கத்திற்கே உள்ளது. எமது இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளினாலேயே உயிர் சேதங்களை குறைக்க முடிந்தது. யாரையும் பட்டினி போடவோ சொகுசு ஹோட்டல்களை தேடி நாம் செல்லவோ இல்லை. கொழும்பில் இருந்து ஊடகங்களுக்கு அறிக்கை விடாது நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். குளங்கள் உடைந்து மக்கள் குடியிருப்புகளுக்குள் நீர் வரும் போது பொதுமக்களை பாதுகாக்க அதிகாரிகள் இரவு, பகல் பாராது பாடுபட்டனர். 400 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. எனவே எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன். சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட முகாம்களுக்கு கூட வெள்ள நீர் வந்தது. எனவே அரசாங்கம் பாரியளவு ஈடுபாட்டுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்றது என்றார்.

Tuesday, January 11, 2011

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் மழை

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதனால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெரும் பாதிப்பினை சந்தித்துள்ளதுடன் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் உரிய வகையில் உணவு, குடிநீர் இன்றியும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். வெள்ளத்தினால் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்பிவைப்பதிலும் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது உணவு கிடைக்குமா என பெருமளவு மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்கள் சிலவற்றில் தங்கியுள்ள மக்களுக்கு பாய் படுக்கைகளோ, சமையல் பாத்திரங்களோ இல்லாத நிலை காணப்படுகின்றது. தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 22 ஆயிரத்து 743 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி நேற்று வரை 185 நலன்புரிநிலையங்களில் 28 ஆயிரத்து 376 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 5 ஆயிரத்து 747 பேர் தங்கியுள்ளனர். அத்துடன் 57 ஆயிரத்து 659 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 16 ஆயிரத்து 996 பேர் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 863 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 2 ஆயிரத்து 885 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட செயலகத்திலனால் நேற்றுக் காலை வெளியிடப்பட்ட அறிக்øகயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தத்øதத் தொடர்ந்து 48 ஆயிரத்து 576 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 82 ஆயிரத்து 615 பேர் நேற்றுவரை வாழ்வாதார தொழில்களை இழந்துள்ளனர். 4 ஆயிரத்து 448 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 856 விவசாயிகளின் பயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் தங்கியிருந்த முருக்கன்தீவைச் சேர்ந்த 4 மாத கைக்குழந்தை கடும் குளிர் காரணமாக திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளது. வேலாயுதம் அனோஜா எனும் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. கடந்த 8ஆம் திகதி முருக்கன்தீவு பூலாக்காடு பிரதேசத்திலிருந்து வெள்ள அபாயம் காரணமாக படகு மூலம் இக்குழந்தை உட்பட குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டிருந்தனர். உரிய மருத்துவ வசதியின்றியே இந்தக் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டு. மாவட்டத்தில் மிக மோசமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த பாதிப்பைத் தொடர்ந்து நேற்றுக்காலை மாவட்ட செயலகத்தில் அவசர மாநாடு நடத்தப்பட்டது. அனர்த்த முகாøமத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இம்மாநாடு இடம்பெற்றது. வெள்ள அனர்த்தத்தில் சிக்கியுள்ளவர்களது முழுமையான விபரங்களை சரியாக பெற்றுக்கொள்வதில் அரசாங்க அதிகாரிகள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் குளங்கள் பல உடைப்பெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மாவட்டத்தில் பல வீதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை காரணமாக வீரக்கொடை வாவி உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனல் வாவியை அண்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கடுக்காமுனை குளத்தின் கட்டுகள் 2 இடங்களில் வெட்டப்பட்டு உடைப்öபக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டபோதிலும் அது தொடர்பில் விசேட கண்காணிப்பு ÷மற்கொள்ளப்பட்டு வருகிறது. அ÷தபோன்று புளுகுநாவி குளமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 31 அடி உயரமுடைய நவகிரி குளத்தின் அணைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து நவகிரி நீர்ப்பாசன பொறியிலாளர் எஸ். கேமகாந் அங்கு நிலைகொண்டு குளத்தினை கண்காணித்து வருகின்றார். மழை தொடர்ந்து பெய்தவண்ணம் இருப்பதாலும் காட்டு வெள்ளம் பெரருகி வருவதாலும் குளங்களிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக வாவியை அண்டியுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். மட்டக்களப்பு திருகோணமலை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் ஸ்தம்பித்துள்ளது. மட்டு. கொழும்பு புகையிரத சேவைம் இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை. நாளாந்தம் கூலி வேலை öசய்து ஜீவனோபயம் நடத்தும் தொழிலாளர்கள் பட்டினிச் சாவினை எதிர்நோக்கும் நிசை ஏற்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் சமைத்த உணவு வழங்கப்படுவதனால் இத்தகையவர்கள் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர். கால்நடைகளும் தரித்துநிற்கவு>ம் முடியாமல் அவதியுறுகின்றன. மேய்ச்சல் தரைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையில் கால்நடைகள் உண்ண உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாறையில் ... அம்பாறை மாவட்டத்திலும் தொடர்ச்சி யாக பெய்துவரும் அடை மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்றும் கடும் மழை பெய்ததனால் பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. இதனால் வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருகின்றது. அம்பாறையிலும் 81 ஆயிரத்து 574 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 12 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 875 பேர் இடம்பெயர்ந்து 41 தற்காலிக முகாம்களிலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலியோடை ஆற்றின் பெருக்கத்தால் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் பல கட்டடங்கள் நீரினால் சூழப்பட்டுள்ளன. சில கட்டடங்களுக்குள் மழைநீர் உட்சென்றுள்ளது. கல்முனை அம்பாறை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவடிப்பள்ளடி பாலத்தின் மேலாகவும் அதனை அண்டிய பகுதிகளிலும் வெளளம் 2 அடிக்கு பாய்கிறது. இதனால் கனரக வாகனங்களில் மட்டுமே பயணிக்கக்கூடியதாக உள்ளது. கல்முனை மத்திய முகாம் வீதிப் போக்னுகுவரத்தும் அக்கரைப்பற்று பொத்துவில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ன. சொறிக்கல் முனைக்கான போக்குவரத்தும் பாதிக்ப்பட்டுள்ளது. நிந்தவூர், காரைதீவு, அட்டாளைச்சேனை, ஆலையடி, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, கல்முனை, பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் வெள்ளத்தினால் பெரும் பாதிப்பினை சந்தித்துள்ளன. இங்கு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உரிய வøகையில் உணவு குடிநீர் என்பன வழங்கப்படவில்லை எனவும் நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Saturday, January 8, 2011

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை!

நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது. புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது. எலுமிச்சை பழத்தில் உள்ள "சிட்ரிக் அமிலம்" நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக இருப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளுக்கு நல்ல மருந்தாகிறது. எலுமிச்சை சாறுக்கு பித்தநீரை சுரக்கும் தன்மை உண்டு. அதனால் காமாலை நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும் சக்தி எலுமிச்சை சாறுக்கு உள்ளதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு போன்ற நிலைகளில் இது பலனளிக்கிறது. உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற்றம் செல்பவர்கள், எலுமிச்சம் சாற்றை நீரில் கலந்து குடித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும், களைப்பு நீங்கும். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும், மன பதட்டம் கொண்டவர்களும் எலுமிச்சை சாறில் நீர் கலந்து பருகலாம். எலுமிச்சை கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்ததால் முக பருவால் துன்பப்படும் இளம் பருவத்தினர், ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 சிட்டிகை மிளகு தூள், 2 தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும். இதனால் ரத்தத்தில் காரத் தன்மை அதிகரிக்கும். அதை தொடர்ந்து கழிவுகள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீர்படும். முகப்பரு போன்றவைகளும் மறையும். மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கும். உடல் புத்துணர்ச்சி பெறும். சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுதூள் அல்லது பச்சை மிளகாய் கலந்து சாலட் ஆக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த சாலட்டை நீரிழிவு நோயாளிகள் தினமும் 1 கப் அளவிற்கு சாப்பிட்டு வருவது உடலுக்கு மிக நல்லது. நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுப்பவர்கள் பருகும் நீரில், 1 கப்புக்கு 1 தேக்கரண்டி என்ற அளவில் எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி குடித்து வந்தால், ரத்தத்தின் காரத்தன்மை அதிகரித்து நோய் பாதிப்பு விரைவில் சீராகும். உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதிற்கு தெளிவும் கிடைக்கும். கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களிலிருந்து விடுபட எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு பின்பு குளிக்கவேண்டும். கோடை காலத்தில் உடல் புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்க வேண்டும். எலுமிச்சையை மழை, கோடை, பனி போன்ற எல்லா காலங்களிலும் உபயோகிக்கலாம். எலுமிச்சை சாறை காய்கறிகளில் கலந்து சாலட் ஆக செய்யும் பொழுது, அந்த காய்கறிகளின் சத்து அதிகரிக்கிறது.

Sunday, January 2, 2011

ஆச்சர்யமான காலண்டர்: 2005க்கும் 2011க்கும் என்ன ஒற்றுமை!

புத்தாண்டு பிறக்கின்றது. புது வருட காலண்டர் வாங்கிவீட்டீர்களா? 2005ம் ஆண்டு காலண்டரை நீங்கள் இப்போது வைத்திருந்தால், 2011ம் ஆண்டு காலண்டர் வாங்க தேவையில்லை. 2005ம் ஆண்டு காலண்டரும், 2011ம் ஆண்டு காலண்டரும் அச்சு அசலாக ஒரே மாதிரி தான் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். இந்த இரண்டு காலண்டர்களும் ஒரே மாதிரியானவையே. இந்த இரு வருடங்களும் நாள், மணி, நிமிடம், நொடியின் அடிப்படையில் ஒரே மாதிரிதான் இருக்கிறது. வியக்கத்தக்க இந்த உண்மையினை உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த ஜீவஜி கால நிர்ணய இயக்குனர் திரு.ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார். வாரம் 7 நாட்கள் என்ற கணக்கில், 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நடக்கலாம் என்று நாம் சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தாலும், இடையில் லீப் வருடம், சர்வதேச நேர மாற்றம் போன்ற காரணங்களால் அப்படி அமைய சாத்தியம் இல்லை என்பதே உண்மை. இதற்கு முன்பு, 1966, 1977, 1983, 1995 ஆகிய ஆண்டுகள் ஒரே மாதிரி அமைந்திருந்தன. ஆனால், 6 ஆண்டுகள் வித்தியாசத்தில் 2005ம் ஆண்டும், 2010ம் ஆண்டும் இவ்வாறு அமைந்திருப்பது அதிசயத்தக்க வண்ணமாகவே உள்ளன. மீண்டும் இது போன்று 11 ஆண்டுகள் கழித்து நடக்கலாம். அதாவது 2022ம் ஆண்டு 2011ம் ஆண்டைப் போலவே அமையலாம் என்றும் திரு. ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்தார். இன்னும் நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? அப்படியானால் சோதித்து பாருங்கள். 2005, 2011 ஆகிய இரண்டு வருடங்களிலும் புத்தாண்டு தினம் சனிக்கிழமை தான். மேலும், ஜனவரி 26 புதன்கிழமையிலும், ஆகஸ்ட் 15 திங்கட்கிழமையிலும் தான் வருகிறது.

புத்தாண்டில் ஒரு அதிசயம்: பிறந்தது விசேஷச குழந்தை!

புதியாய் பூத்த புத்தாண்டே பல அதியசங்களை கொண்டதாக உள்ளது. இந்நிலையில் புத்தாண்டில் மேலும் ஒரு விந்தையான நிகழ்வாக ஒரு விசேஷச குழந்தை பிறந்தது. கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடப்பட்ட வேளையில், குஜராத் மாநிலத்தில் சூரத் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு நேற்று குழந்தை பிறந்தது. இதில் அதிசயம் என்னவென்றால், அக்குழந்தை பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் என எல்லாமே 1 தான். அதாவது, 1.1.11 அன்று இரவு 1மணி 11 நிமிடத்தில் இக்குழந்தை பிறந்தது. இக்குழந்தையும் அதன் வாழ்க்கையில் முதல் இடத்தைப் பெற நாமும் வாழ்த்துச் சொல்வோமா!