
Wednesday, June 30, 2010
20 வருடங்களின் பின் ஒரு தரிசனம்

இந்தியாவில் விண்டோல்-7 விலை

Labels:
விண்டோஸ் 7
Tuesday, June 29, 2010
அமெரிக்காவில் இந்த வருடத்தில் 133 வங்கிகள் மூடப்பட்டன

Labels:
அமெரிக்க வங்கிகள்
Sunday, June 27, 2010
தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன: நடிகர் சிவக்குமார்

Labels:
செம்மொழி மாநாடு
சங்க கால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள்

Labels:
செம்மொழி மாநாடு
Friday, June 25, 2010
மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்

மூளையை வளர்க்கும் இணைய தேடல்

யாழ். குடாநாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
காங்கேசன்துறை துறைமுகத்தைப் பத்துக் கோடி ரூபா செலவில் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட விருக்கின்றன.
நாட்டின் கடற்போக்குவரத்துக் களைச் சீரமைக்கும் திட்டத்தில் காங் கேசன் துறைமுக அபிவிருத்தியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகப் புன ரமைப்பு வேலைகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் என்று தகவல் ஒன்று கூறுகின்றது. இது வரை காலமும் காங்கேசன்துறை துறைமுகம் பெரும்பாலும் இராணுவப் பணிகளுக்கே பயன்படுத்தி வரப்பட்டுள்ளது. தற் பொழுது நாட்டில் அமைதி நிலை கொண்டு வருவதால் துறைமுகத்தைப் பொதுவான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
புனரமைப்பு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், இறங்குதுறைகள் நவீனப்படுத்தப் படும் என்றும் துறைமுகப் படுகை ஆழப் படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
துறைமுகத்துக்கான பாதைகளும் புனரமைக்கப்படவிருப்பதோடு காங் கேசன்துறை துறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய் வதற்கான திட்டங்களும் உருவாக்கப் பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. நாட்டின் நவீன வர்த்தகத் துறை முகங்களில் ஒன்றாக காங்கேசன் துறைமுகம் விரைவில் செயற்பட விருப்பதாக துறைமுக மற்றும் விமானத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். எதிர்காலத்தில் காங்கேசன்துறை துறைமுகம் பிரயாணிகளையும், சரக்கு களையும் ஏற்றிஇறக்கும் பிரதான துறைமுகங்களில் ஒன்றாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் வடக்கில் விளையும் பொருள்களைச் சுலபமாக ஏனைய துறை முகங்களுக்குக் கொண்டு செல்லும் வசதிகளைக் கொண்ட துறைமுக மாகவும் இது அபிவிருத்தி செய்யப் படவிருக்கிறது.
குடாநாட்டுச் சந்தைகளில் திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
யாழ். குடாநாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
திருநெல்வேலி, சுன்னாகம், மருத னார்மடம் போன்ற சந்தைகளிலேயே மரக்கறி வகைகளின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளன. தற்போது பெய்துவரும் பருவம ழையே இந்த மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக திருநெல்வேலிச் சந்தையில் மரக்கறி வகைகளின் நேற்றைய விலை விபரம் வருமாறு:
கத்தரிக்காய் கிலோ 130 ரூபா, பயிற் றங்காய் கிலோ 90 ரூபா, உருளைக் கிழங்கு கிலோ 80 ரூபா, கோவா கிலோ 80 ரூபா,
கரட் கிலோ 90 ரூபா, தக்காளிப்பழம் கிலோ 70 ரூபா, பச்சைமிளகாய் கிலோ 240 ரூபா, வெங்காயம் கிலோ140 ரூபா, முருங்கைக்காய் கிலோ 280 ரூபா, கீரைப்பிடி ஒன்று 30 ரூபா.
மூன்று சிம் போன் Icube-i700

மொபைல் டேட்டா அழிந்து போனால்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: கோப்பை வென்றது இந்தியா
Labels:
கிரிக்கெட்
Thursday, June 24, 2010


Labels:
செம்மொழி மாநாடு
Wednesday, June 23, 2010

Labels:
செம்மொழி மாநாடு

Labels:
செம்மொழி மாநாடு
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக எளிய தமிழ் புத்தகம் வெளியிட பேராசிரியர் சிவத்தம்பி வேண்டுகோள்

Labels:
செம்மொழி மாநாடு
தமிழரென சொல்லிக் கொள்வது பெருமை தரும் : ஜார்ஜ்ஹார்ட் பெருமிதம்
""மகாகவி பாரதியாரின் கூற்றைப் போலவே, தமிழரெனச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ள வேண்டும்'' என மொழியியல் அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் பேசினார்.
செம்மொழி மாநாட்டு துவக்க விழாவில் பங்கேற்ற அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ்ஹார்ட் பேசியதாவது:
மகாகவிபாரதியார் "நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்' என்ற பாடலில் தமிழர் எனச் சொல்லிக் கொள்வதன் பெருமை பற்றிக்
கூறியுள்ளார்.
தனிச்சிறப்பு மிக்க தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்மையானது. தமிழகம், கேரளா, இலங்கை போன்ற பரந்த வெளிகளில் செவ்விலக்கியமாக பேசப்பட்டு வந்துள்ளது.
அதன் தனிச்சிறப்பு மிக்க கவிகள், ஆன்றோர்களின் அனுபவம், மகிழ்ச்சி, வருத்தம் உள்ளிட்டவற்றின் சிறப்பான வெளிப்பாடாகும்.
கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி எழுதிய "உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் கொள்ளலர்' என்ற பாடலை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எவ்வளவுஉயரிய கருத்துகளை தமிழ்ப்பாடல்கள் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுவே சான்று.
வேட்கைப்பத்து என்ற சங்க என்னும் பாடலில், "வாழியாதன் வாழியவனி' என்று தொடங்கும் அடிகளில் இருந்து மழை பல பொலிக, வருக இரவலர் என உலகு உய்ய தேவையான கருத்துகள் மட்டுமே கோரப்பட்டுள்ளன.
இத்தமிழ் மாநாட்டில் பங்கு பெற்றமைக்காக பெருமைப்படுகிறேன், என்றார்.
Labels:
செம்மொழி மாநாடு
செம்மொழிகளுள் தமிழுக்குச் சிறப்பிடம் உண்டு: பேராசிரியர் அஸ்கோ பர்போலோ
""மறக்க முடியா செம்மையான இலக்கியங்களைத் தமிழ் மொழி தந்திருக்கிறது'' என, "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' பெற்ற பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேசினார்.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, சிந்துசிந்து வெளியின் எழுத்து வடிவம் பழந்தமிழுக்கு நெருக்கமான திராவிட மொழி வடிவம் என்று கூறும் நூலைப்படைத்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் அஸ்கா பர்போலாவுக்கு "கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதீபாபட்டீல் விருது, 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, ஐம்பொன் வள்ளுவர் சிலை ஆகியவற்றை வழங்கினார்.
விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்பரையாற்றி அஸ்கோ பர்போலா பேசியதாவது: புராதனம் மிக்கது செம்மொழித் தமிழ். மிக பழங்காலத்துக்கு முன்பே காலத்தால் அழியா இலக்கியங்களைத் தந்த மொழி தமிழ் மொழி. 3,000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம்; இலக்கிய வளம் மிக்கதும் கூட. அதற்கு முந்தைய சிந்துவெளி நாகரீக எழுத்துகள் திராவிட வடிவமே. ரிக்வேதங்களில் குறிப்பிடப்படும் நாகரீகம், சிந்துவெளி நாகரீகம் திராவிடத்தோடு தொடர்புடையது. சிந்து வெளி எழுத்துருக்களை காப்பாற்றி வைத்திருப்பது திராவிட மொழிக்குடும்பமே; குறிப்பாக தமிழ். ஹரப்பா நாகரீகம் திராவிட நாகரீகத்தோடு தொடர்புடையது. உலகின் பழமையான மொழிகளுள் தமிழ் குறிப்பிடத்தக்கதும் சிறப்புடையதும் ஆகும், என்றார்.
Labels:
செம்மொழி மாநாடு
உலகின் முதல் மொழி தமிழ்! முதல்வர் கருணாநிதி

Labels:
செம்மொழி மாநாடு
தமிழர்களின் பண்பாட்டை புகழ்ந்தார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்

Labels:
செம்மொழி மாநாடு
Tuesday, June 22, 2010
9 ஆவது செம்மொழி மாநாடு இன்று கோலாகலமாக துவங்குகிறது
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். வரும் 27ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டினால், கோவையே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.
"கொடிசியா' மைதானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்குகிறது. துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கிறார். மாநாட்டு சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்ட பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கி கவுரவிக்கிறார்.
பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடக்கவுரையாற்றுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம், கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, அவினாசி ரோடு வழியாக சென்று, மாநாட்டு வளாகத்தை அடைகிறது.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பீளமேடு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் இருந்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் பார்வையிட, அவினாசி சாலையில் பல இடங்களில் பார்வையாளர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை வ.உ.சி., பூங்கா மைதானம் முதல் ஹோப் காலேஜ் வரை சாலையின் இரு பக்கங்களிலும் நின்று கண்டுகளிக்கலாம்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்றிரவு கோவை வந்தார். கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருக்கும் அவர், இன்று காலை 10.30 மணிக்கு நடக்கும், மாநாடு துவக்க விழாவில் கலந்து கொள்கிறார். துவக்க விழா, 11.40 மணிக்கு முடிந்ததும், சர்க்யூட் ஹவுஸ் சென்று ஓய்வு எடுக்கிறார்.
பின், மாலை 5.30 மணிக்கு, கோவை மருத்துவக் கல்லூரிக்கு வந்து, அங்குள்ள மேடையில் இருந்து, "இனியவை நாற்பது' என்ற பெயரில் நடக்கும் மாநாட்டுப் பேரணியை கண்டு களிக்கிறார். இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையம் செல்கிறார். 7.25 மணிக்கு, விமானப்படை விமானம் மூலம் டில்லிக்கு புறப்படுகிறார்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் நேற்று காலை முதல் கோவை வரத்துவங்கினர். அவர்கள் தங்குவதற்கு நகரில் பல ஓட்டல்கள் மற்றும் கல்லூரி விடுதிகளில், அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாநாட்டுக்கு முன்பே மக்கள் படையெடுப்பு
நேற்றே பல ஆயிரம் மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து, மாநாட்டு வளாகத்தை பார்வையிட்டனர். அவினாசி சாலை முதல் மாநாட்டு மேடை அமைந்துள்ள பொது அரங்க வளாகம் வரை சாலை நெடுகிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக நடந்து சென்று அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய அரங்கங்களை பார்வையிட்டனர். மாநாட்டை முன்னிட்டு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநாடு துவங்கும் முன்பே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், வந்து சென்றுள்ளனர். இதனால், மாநாட்டின் போது பல லட்சம் மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது' என்றார்.
10 அடிக்கு ஒரு போலீஸ்
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு செல்லும் அவினாசி சாலையின் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 1,000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்து அடிக்கு ஒரு போலீஸ் வீதம் சாலையின் இரு புறங்களிலும் நேற்று காலை முதலே நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி, முதல்வர், துணை முதல்வர், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள் அணிவகுப்பை பார்வையிடுவதற்கான மேடைகள் தோறும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மாநாட்டு பொதுஅரங்க வளாகத்தை அடுத்துள்ள, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்குதான், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்க நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட 4,600 பேர் பங்கேற்கின்றனர். இவ்வளாகத்துக்குள், பங்கேற்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தவிர பிறருக்கு அனுமதியில்லை. மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்தில் 4.4 லட்சம் சதுர அடி பரப்பில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலில் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை அமர்ந்து துவக்க விழாவை பார்க்கலாம். பல்வேறு தலைப்புகளில் நடக்கும் ஆய்வரங்கத்திற்கு 21 தனி அரங்குகள் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு பந்தலை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் நடக்கும் நிகழ்வுகளை கூட துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் ராட்சத பலூனில் நவீன கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. தமிழக டிஜிபி லத்திகாசரண் தலைமையில் கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், இரண்டு ஐ.ஜி.க்கள், 8 டிஐஜிக்கள் உட்பட பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Labels:
செம்மொழி மாநாடு
செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!

Labels:
செம்மொழி மாநாடு
தமிழ்ச் செம்மொழி
உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ்மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு" எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.
கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கி.பி 18 ஆம் நூற்றாண்டினராகிய மாதவச் சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது. தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞான முனிவர் கருதுதற்கு உரியர்.
பன்மொழிப் புலமைமிக்க, புகழ்பெற்ற தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ்மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் ஆய்வுநூல்களில் நிலைநாட்டியுள்ளனர்.
“இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.
சங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்" எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.
உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ . கே . இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.
மேலே கூறப்பெற்ற மொழிவல்லுநர்களின் கருத்துகள் ஒருபுறமாக, வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூலமொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். திராவிடமொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம். பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சிஅறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.
எனவே, செம்மொழித்தமிழின் சிறப்பும் உலகமக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் தெள்ளிதிற் புலனாகும்.
அறிஞர் பெருமக்களும் மொழிவல்லுநர்களும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே தமிழ் செம்மொழி என்ற கருத்தினைத் தளராது வலியுறுத்திக் கூறி வந்திருப்பினும், மாண்புமிகு தமிழக முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மேற்கொண்ட மதிநுட்பத்துடன் கூடிய விடாமுயற்சியின் விளைவாக இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்நன்னாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும்.
Labels:
செம்மொழி மாநாடு
நாளை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆரம்பம்

Labels:
செம்மொழி மாநாடு
Friday, June 18, 2010
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார்

Labels:
அந்தோனியார்
Thursday, June 17, 2010

+and+Amitabh+Bachchan+(L).jpg)
Labels:
புகைப்படங்கள்

Labels:
புகைப்படங்கள்

Labels:
புகைப்படங்கள்
Wednesday, June 16, 2010
உங்கள் கைகளில்


Labels:
உங்கள் கைகளில்
Tuesday, June 15, 2010
2010 உலகக்கிண்ண காற்பந்து
உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் 2010 ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகின்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 204 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இம்முறை முதற் தடவையாக ஆப்பிரிக்க நாடொன்றில் இறுதிச் சுற்று நடைபெறுகின்றது. ஜெர்மனியில் நடைபெற்ற 2006 உலகக்கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றில் இத்தாலி வெற்றி பெற்றது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆபிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது.
சுனாமி

Monday, June 14, 2010
Sunday, June 13, 2010
கோப்பை வென்றது இந்தியா:ரெய்னா அதிரடி ஆட்டம்

Labels:
கிரிக்கெட்
Monday, June 7, 2010
ஜகயோதியாய் ஒளிரும் தங்கங்கம்

வி(வீ)திகளும் நடைமுறைகளும்

